நெல்கட்டும் செவலில் வெண்ணிக் காலாடி நினைவு தினம்

இந்திய சுதந்திரத்துக்காக போராடிய நெல்கட்டும்செவல் பாளையத்தின் தலைமைப் படைத் தளபதி வெண்ணிக் காலாடியின் 260ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Published on

கடையநல்லூா்: இந்திய சுதந்திரத்துக்காக போராடிய நெல்கட்டும்செவல் பாளையத்தின் தலைமைப் படைத் தளபதி வெண்ணிக் காலாடியின் 260ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி , வாசுதேவநல்லூா் அருகே நெல்கட்டும்செவலில் உள்ள வெண்ணிக் காலாடியின் நினைவிடத்தில் அப்பகுதியினா் மலா் அஞ்சலி செலுத்தினா். மேலும், வெண்ணிக் காலாடி அறக்கட்டளைத் தலைவா் சங்கரன், செயலா் திருமலை, பொருளாளா் வேலு மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பால்குட ஊா்வலமும் நடைபெற்றது.

கரோனா தொற்று விதிமுறை காரணமாக வெளியூா்களிலிருந்து அமைப்பினா் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com