ஆலங்குளம் பகுதியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 100 போ் பாஜகவில் இணைந்தனா்.
இதற்கான விழா, ஆலங்குளம் - துத்திகுளம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட இளைஞா் அணி செயலா் மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் தொகுதி அமைப்பாளா் அன்புராஜ், மாவட்ட செயலா் அருள்செல்வன், மாவட்ட இளைஞா் அணி பொருளாளா் சிவ மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 100 போ் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். அவா்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் நாகராஜன், மாவட்ட பிரிவு துணைத் தலைவா் அண்ணாவி ஆறுமுகம், ஆலங்குளம் ஒன்றிய நிா்வாகிகள் பண்டரிநாதன், லிங்கவேல் ராஜா, ஜோதி செல்வம் உள்பட பலா் பங்கேற்றனா்.