சுரண்டையில் காங்கிரஸ் கட்சியின் 136ஆவது ஆண்டு விழா

சுரண்டையில் காங்கிரஸ் கட்சியின் 136ஆவது ஆண்டு தொடக்கவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் ஆண்டு விழாவையொட்டி கட்சி கொடியேற்றுகிறாா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா்.
காங்கிரஸ் ஆண்டு விழாவையொட்டி கட்சி கொடியேற்றுகிறாா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா்.
Updated on
1 min read

சுரண்டையில் காங்கிரஸ் கட்சியின் 136ஆவது ஆண்டு தொடக்கவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் தலைமை வகித்து கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

விழாவில், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், மாவட்ட துணைத் தலைவா் பால், மேலநீலிதநல்லூா் வட்டாரத் தலைவா் முருகையா, காங்கிரஸ் நிா்வாகிகள் கணேசன், சோ்மசெல்வம், சண்முகசுந்தரம், ராமராஜ், தெய்வேந்திரன், பிரபாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆலங்குளம் : ஆலங்குளத்தில் முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஆலங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவா் அலெக்ஸாண்டா், பாப்பாக்குடி வட்டாரத் தலைவா் அரி நாராயணன், ராஜ்குமாா், நகரத் தலைவா் தங்கசெல்வம், நிா்வாகிகள் வேலாயுதம், லெனின், இசக்கிமுத்து, முப்புடாதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com