நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

புளியங்குடியில் மே.18ல் ஆர்ப்பாட்டம் நடத்த வர்த்தகர்கள் முடிவு

புளியங்குடியில் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வேண்டி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

News image
Updated On :16 மே 2020, 12:07 pm

DIN

புளியங்குடியில் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வேண்டி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக புளியங்குடி அனைத்து வர்த்தகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது; பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை புளியங்குடி பகுதி மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். 

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வணிக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி விட்ட நிலையில் புளியங்குடி பகுதியில் எந்த ஒரு வணிக நிறுவனமும் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. 

இதனால் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருவதுடன், வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர்.
 எனவே 18ஆம் தேதி வணிக நிறுவனங்கள் செயல்பட மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும். 

இல்லையெனில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.