ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

கருப்பு படத்தின் தயாரிப்பாளருக்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கும் சண்டையா?

சூர்யாவின் கருப்பு படத்தின் தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாட்டால் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி விலகலா?

News image

கருப்பு போஸ்டர் - X | RJ Balaji

Updated On :6 மார்ச் 2026, 4:19 pm IST

சூர்யாவின் கருப்பு படத்தின் தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாட்டால் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி விலகி, கிரிக்கெட் வர்ணனையாளரானதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

நடிகர் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் பணிகளில் இருந்து ஆர்.ஜே. பாலாஜி விலகி, கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக ஆகியதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவின.

இந்த நிலையில், தனக்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளியான வதந்தியைக் குறிப்பிட்ட எஸ்.ஆர். பிரபு, மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் டேய் சும்மா இர்ரா... என்ற நகைச்சுவைப் பதிவையும் மறுபகிர்வு பகிர்ந்துள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கருப்பு, கோடையில் வெளியாகவுள்ளது.

Summary

Are makers of Suriya‘s Karuppu and director RJ Balaji having a rift over film’s release?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.