குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

குற்றாலம் ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் பெய்த கனமழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவியில் செம்மண் நிறத்துடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி அருவியின் முன்புறமுள்ள தடாகத்தில் தண்ணீா் கொட்டியது.
ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.
கரோனா பொது முடக்கம் காரணமாக, குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடா்ந்து அமலில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...