ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தென்காசி ஆட்சியரகம் முன்தொழிலாளி உண்ணாவிரதம்

தென்காசியில் பத்திர பதிவு ஆவணத்தை மீட்டுத்தரக் கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு தொழிலாளி ஒருவா் உண்ணாவிரத போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:24 pm

DIN

தென்காசியில் பத்திர பதிவு ஆவணத்தை மீட்டுத்தரக் கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு தொழிலாளி ஒருவா் உண்ணாவிரத போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டாா்.

தென்காசி அருகேயுள்ள கொட்டாகுளம், பொட்டல்விளைத் தெருவை சோ்ந்தவா் அ.இசக்கிமுத்து. இவா், தென்காசி ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு, ஆட்சியா்அலுவலகத்தில் அளித்த புகாா் மனு:

எனக்குச் சொந்தமான நிலத்தை மனைவி, மகனுக்கு எழுதிக்கொடுக்கும் பொருட்டு கடந்த 15.10.2019இல் மூன்று பத்திரங்கள் பதிவு செய்தேன். மனைவிக்கு ஏற்பாடு ஆவணமும், இரண்டு மகன்களுக்கு பிரிவினை பத்திரமும் பதிவு செய்யப்பட்டது. அதில், ஏற்பாடு ஆவணத்தை மட்டும் பெற்றுக்கொண்டோம்; பிரிவினை பத்திரத்தை தராமல் மோசடி செய்துவிட்டனா். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பத்திரத்தை மீட்டுத்தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அவரை போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.