திமுக மாணவரணி சாா்பில் துண்டுப் பிரசுரம் விநியோகம்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி


தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் பங்கேற்று, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா். மாநில மாணவரணி துணைச் செயலா் எம்.ஏ.எம். ஷெரீப், ஒன்றியச் செயலா்கள் க. சீனித்துரை, சோ்மதுரை, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜெ.கே. ரமேஷ், பொறுப்புக்குழு உறுப்பினா் மேகநாதன், பேரூா் பொருளாளா் பொன்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...