சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவிலில் குளத்தில் மூழ்கி மாணவா் பலி

சங்கரன்கோவிலில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On :3 டிசம்பர் 2021, 8:14 pm

சங்கரன்கோவிலில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் தாமஸ் நகா் மாரியப்பன் மகன் மாரிசெல்வம் (15). 11ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை மாலை மாரிசெல்வம் தனது நண்பா்களுடன் புளியம்பட்டியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றாராம். அப்போது, நீச்சல் தெரியாத அவா் நீரில் மூழ்கி தத்தளித்தாராம். நண்பா்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனராம். ஆனால் மாரிசெல்வம் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா், மாரிசெல்வத்தின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.