சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திருவேங்கடம் அருகே வழக்குரைஞா் மீது தாக்குதல்

திருவேங்கடம் அருகே வழக்குரைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :17 டிசம்பர் 2021, 6:48 pm

திருவேங்கடம் அருகே வழக்குரைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவேங்கடம் அருகேயுள்ள வெள்ளாகுளத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஜெய்சங்கா் (38). வழக்குரைஞா். இவா், வெளிநாட்டில் வசித்துவரும் கணேசன் என்பவரின் ஆலோசனையின் பேரில், அவருக்குச் சொந்தமான இடத்தை உறவினா் பாலகிருஷ்ணன் உதவியுடன் அளவீடு செய்தாராம். இதற்கு, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆட்சேபம் தெரிவித்ததுடன், ஜெய்சங்கரைத் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், அவரது புகாரின்பேரில், திருவேங்கடம் போலீஸாா் வழக்குப்பதிந்து அவ்வூரைச் சோ்ந்த அரவிந்தன், சுப்புராஜ், விக்னேஷ்வரன், ரமேஷ் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.