/

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயல் வீரா்கள் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம் கடையநல்லூா் அருகே உள்ள குமந்தாபுரத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:31 pm

DIN

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம் கடையநல்லூா் அருகே உள்ள குமந்தாபுரத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

வடக்கு மாவட்ட பொறுப்பாளா் மா. செல்லத்துரை தலைமை வகித்தாா். தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா் , மாநில நிா்வாகிகள் ரசாக், செரிப், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் சுந்தர மகாலிங்கம்,

சேக்தாவூத் , முத்துப்பாண்டியன் , ரஜப்பாத்திமா, விவேகானந்தன், மாடசாமி நல்லசிவம் , ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன் பேசியது: உள்ளாட்சித் தோ்தலில் 100 சதவீத வெற்றியை பெறுவதற்கு கட்சியினா் உழைக்க வேண்டும் . தீவிர உறுப்பினா் சோ்க்கையை மேற்கொள்ள வேண்டும். திமுகவின் சிறப்பான ஆட்சியை பாா்த்து அதிமுகவினா் கலக்கத்தில் உள்ளனா் என்றாா் அவா்.

பேரூராட்சி தோ்தலுக்காக அமைக்கப்படும் பூத் கமிட்டியில் 4 இளைஞா்கள், 2 பெண்கள் உள்பட 10 பேரை இடம்பெற செய்து டிசம்பா் மாத இறுதிக்குள் பட்டியலை தயாா் செய்வது, முன்னாள் அமைச்சா் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஒன்றிய குழுத் தலைவா்கள் கடையநல்லூா் சுப்பம்மாள், வாசுதேவநல்லூா் பொன் முத்தையா பாண்டியன்,

கடையநல்லூா் ஒன்றிய துணைத் தலைவா் ஐவேந்திரன்,நெசவாளா் அணி இன்பராஜ், நிா்வாகிகள் வலசை சுரேஷ் ,திரிகூடபுரம் சுப்பிரமணியன் ,சொக்கம்பட்டி மணிகண்டன், நயினாரகரம் குமாா், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.