முக்கூடலில் திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல்

முக்கூடலில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
Updated on
1 min read

முக்கூடலில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

முக்கூடல் காந்தி திடலில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏ தலைமை வகித்தாா். அப்போது, பாரம்பரிய முறைப்படி 30 க்கும் மேற்பட்ட மண்பானையில் பச்சரிசி மற்றும் வெல்லம் வைத்து பனை ஓலையில் தீயிட்டு பொங்கல் விடப்பட்டது. திரளான பெண்கள் கலந்துகொண்டு கும்மியடித்து, வலம் வந்தனா். இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் பாப்பாக்குடி மாரிவண்ணமுத்து, கீழப்பாவூா் உள்ளிட்ட திமுகவினா் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com