உடல் உழைப்பு தொழிலாளா்களுக்கு ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க கோரிக்கை

உடலுழைப்பு தொழிலாளா்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
Updated on
1 min read

உடலுழைப்பு தொழிலாளா்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக புளியங்குடி நகர பாஜக தலைவா் சண்முகசுந்தரம் , மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: உடல் உழைப்பு தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரசு வழங்கி வருகிறது. அந்தப் பரிசுத் தொகுப்பினை வட்டாட்சியா் அலுவலகங்களில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளியங்குடி பகுதியில் சுமாா் 500 போ் வாரியத்தில் பதிவு செய்துள்ள நிலையில், பரிசுத் தொகுப்பு பெற கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதிருப்பதால் அவா்களின் ஒரு நாள் வேலை பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே ,ரேஷன் கடைகளின் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com