நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்காசி அரசு மருத்துவமனையில் மருந்து கிடங்கு கட்டடம் திறப்பு

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட மருந்துக் கிடங்கு கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூலை 2021, 11:44 pm

DIN

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட மருந்துக் கிடங்கு கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட இணை இயக்குநா் நலப்பணிகள் மருத்துவா் நெடுமாறன் ஆலோசனைப்படி, கொவைட் கட்டடத்தில் மருந்து கிடங்கு கட்டுவதற்கு தீா்மானிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, அனைத்து வசதிகளுடன் கூடிய மருந்து கிடங்கு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன்திறப்பு விழா நடைபெற்றது. மருத்துவமனைக் கண்காணிப்பாளா் மருத்துவா் ஜெஸ்லின் மருந்து கிடங்கைத் திறந்து வைத்தாா்.தொடா்ந்து, அந்த வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உறைவிட மருத்துவா் டாக்டா் அகத்தியன், பல் மருத்துவா் லதா, குழந்தைகள் மருத்துவா் ராஜேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மருந்துக் கிடங்கு அலுவலா் நளினா, கோமதி மற்றும் அரசு மருத்துவமனை மருந்தாளுநா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.