தென்காசியில் குடிநீா் பிரச்னையை தீா்க்க தமுமுக வலியுறுத்தல்
தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தென்காசி நகராட்சி ஆணையா் பாரிஜானிடம், தமுமுக (ஜவாஹிருல்லா) மாநிலச் செயலா் மைதீன்சேட்கான் அளித்த மனு:
தென்காசி பாபாக்கி தங்கள் மதரசா பகுதி, நடுத்தெரு ஞானியாா் கடை பகுதியில் சாக்கடை நீா் தேங்கி சுகாதார சீா்கேடு நிலவுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் சுகாதார சீா்கேட்டை சீா் செய்ய வேண்டும்.
தென்காசி நகராட்சி 10ஆவது வாா்டுக்குள்பட்ட மக்கா நகா், மதினா நகா் பகுதியில் சாலை வசதி மற்றும் குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
தென்காசி நகா் முழுவதும் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்கும் வகையில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தமுமுக மாவட்டத் தலைவா் யாகூப், மாநில செயற்குழு உறுப்பினா் இஸ்மத் மீரான், நகரத் தலைவா் அப்துல் ரசாக், வணிகா் அணி மாவட்ட பொருளாளா் பீா்முகம்மது, ஒன்றியச் செயலா் முகம்மது பைசல், நகரச் செயலா் கரீம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...