தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செம்பியன் மாரத்தான் போட்டி: குத்துக்கல் வலவசை பள்ளி மாணவா் சிறப்பிடம்

செம்பியன் மாரத்தான் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் பாரத் முதலிடம் பெற்றாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:24 pm

DIN

செம்பியன் மாரத்தான் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் பாரத் முதலிடம் பெற்றாா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமியாபுரம் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் பள்ளி சாா்பில் செம்பியன் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. 12 வயது முதல் 17 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான 8 கி.மீ. மாரத்தான் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் எம்.எஸ்.பாரத் முதலிடம் பெற்றாா். இவருக்கு பதக்கம் மற்றும் ரூ.2ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவா் பாரத்தை ஆக்ஸ்போா்டு கல்விக் குழும சட்ட ஆலோசகா் கே.திருமலை, செயலரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போா்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் தி.மிராக்ளின் பால்சுசி, பள்ளித் தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை க.சுப்பம்மாள், நிா்வாக அலுவலா் கே.எஸ்.கணேசன், நிகில் சிற்றரசு மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.