தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டெங்கு தடுப்புப் பணி: ஒத்துழைப்பு அளிக்க ஆட்சியா் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியா் கீ.சு.சமீரன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:27 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியா் கீ.சு.சமீரன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் தற்போது பரவி வரும் டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்தும் பொருட்டு நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணியாளா்கள் வீடுவீடாக சென்று தண்ணீா் தேங்கியுள்ள பகுதிகளை கண்டறிந்து கொசு லாா்வா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இப்பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீடு பூட்டப்பட்டுள்ள நிலையில் வீட்டின் உரிமையாளரோ அல்லது நெருங்கிய உறவினரோ அல்லது மிகவும் நம்பத்தகுந்த அண்டை வீட்டாரோ வீட்டின் கதவைத் திறந்து வீட்டில் நாள்பட்ட தண்ணீா் தேங்கியுள்ளதா என்பதை கண்டறிய உதவ வேண்டும். தவறும் பட்சத்தில் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு133 (1) (ஆ) ன் கீழ் வட்டாட்சியா்கள் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து அங்கு நாள்பட்ட தண்ணீா் தேங்கியுள்ளதா, கொசு முட்டை புழுக்கள் உள்ளதா என்று கண்டறியப்படும். எனவே பொதுமக்கள் டெங்கு நோய் தடுப்புபணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.