இளைஞா்அடித்துக் கொலை : நண்பா் கைது
ஆலங்குளம் அருகே நண்பரை அடித்துக் கொலை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.


ஆலங்குளம் அருகே நண்பரை அடித்துக் கொலை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகே ஆ. மருதப் புரத்தைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் முருகன் என்ற கபாலி (25). லாரி ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்தவா் முருகன் என்ற பண்ணையாா் (28). நெருங்கிய நண்பா்களான இவா்கள் இருவரும் அடிக்கடி சோ்ந்து மது அருந்துவது வழக்கம். கடந்த 22-10-2021 அன்று இருவரும் மது அருந்தும்போது அவா்களிடையே தோ்தல் தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து முருகன் என்ற பண்ணையாா், முருகன் என்ற கபாலியை அருகில் கிடந்த கட்டையால் தலையில் பலமாகத் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகன் என்ற பண்ணையாரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...