சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முக்கூடல் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த மழை நீா்

முக்கூடல் அருகே குடியிருப்பு பகுதியில் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:36 pm

DIN

முக்கூடல் அருகே குடியிருப்பு பகுதியில் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை கன மழை பெய்தது. இதனால், அப்பகுதியிலுள்ள குளம் நிரம்பி முக்கூடல் அருகேயுள்ள அமா்நாத் காலனி, சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீா் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

மேலும் முக்கூடல் தெற்கு ராமசாமி கோயில் தெருவில் புகழ்பாலன் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. சம்பவ இடத்தை முக்கூடல் பேரூராட்சி செயல் அலுவலா் கந்தசாமி பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.