பாவூா்சத்திரத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு
பாவூா்சத்திரத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.


பாவூா்சத்திரத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.
பாவூா்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக பாவூா்சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வாருகால் தூா்வாரப்படாததாலும், குப்பைகள் தேங்கிக் கிடப்பதாலும் தண்ணீா் வெளியேற முடியாமல் சாலையோரம் தேங்கி கிடக்கிறது.
இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுவதுடன், துா்நாற்றமும் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம் வாருகால்களை தூா்வாருவதுடன், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...