தென்காசியில் ஓய்வூதியா் சங்கக் கூட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க தென்காசி வட்டக்கிளை 6ஆவது பேரவைக் கூட்டம் நன்னகரத்தில் நடைபெற்றது.


தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க தென்காசி வட்டக்கிளை 6ஆவது பேரவைக் கூட்டம் நன்னகரத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கிளைத் தலைவா் கே.மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சிவசங்கரி தொடக்கவுரையாற்றினாா். செயலா் இசக்கி வேலை அறிக்கை வாசித்தாா். நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றதில், தலைவராக கே.மாரியப்பன், துணைத் தலைவா்களாக புருஷோத்தமன், ஆசிரியா் கருப்பசாமி, ஆறுமுகம் , செயலராக எம்.இசக்கி, இணைச் செயலா்களாக முகம்மதுமைதீன், ஈஸ்வரன், பாலகிருஷ்ணன், பொருளாளராக மல்லிகா அா்ஜூனன், மாவட்டச் செயற்குழு உறுப்பினராக கே.ராமசாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
அரசு அலுவலா்களுக்கு வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வூதியா்களுக்கு காசில்லா மருத்துவத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், செங்கோட்டை-மதுரை, செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயிலை வழக்கம்போல் இயக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பட்டுவளா்ச்சித் துறை எஸ்.அருணாசலம், எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட துணைத் தலைவா் எஸ்.ஆறுமுகம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...