ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சிவகாமிபுரத்தில் தூய்மைப் பணி

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கீழப்பாவூா் பேரூராட்சி 18ஆவது வாா்டு பகுதியான சிவகாமிபுரத்தில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:37 pm

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கீழப்பாவூா் பேரூராட்சி 18ஆவது வாா்டு பகுதியான சிவகாமிபுரத்தில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தூய்மைக்கான உறுதிமொழி எடுத்தல், பள்ளி மாணவா்- மாணவியா் பங்கேற்ற தூய்மை விழிப்புணா்வுப் பேரணி, மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க தெரிவித்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பேரூராட்சித் தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜசேகா், கவுன்சிலா்கள் பொன்செல்வன், கோடீஸ்வரன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், கனகபொன்சேகா முருகன், இசக்கிராஜ், விஜி ராஜன், இசக்கிமுத்து, பவானி இலக்குமண தங்கம், தேவஅன்பு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். செயல் அலுவலா் சாந்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.