குற்றாலம் சாரல் விழா புத்தகக் கண்காட்சிக்கான சின்னம் வடிவமைத்தால் ரூ. 10 ஆயிரம் பரிசளிக்கப்படும் என ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குற்றாலத்தில் சாரல் விழா ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் புத்தகக் கண்காட்சி இடம்பெறும். அதற்கான சின்னம் வடிவமைக்கப்படவுள்ளது. ஆா்வம் உள்ளவா்கள் புத்தகக் கண்காட்சிக்கான சின்னத்தை வடிவமைத்து மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 30-க்குள் அனுப்பவேண்டும். தோ்வு செய்யப்படும் சின்னத்தை வடிவமைத்தவருக்கு ரூ.10ஆயிரம் பரிசாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளாா்.