போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தென்காசி அரசு மருத்துவமனையில் செவிலியா் தின விழா

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :12 மே 2022, 7:44 pm

DIN

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் இரா. ஜெஸ்லின் தலைமை வகித்து செவிலியா்களின் அயராத பணியினை பாராட்டி பேசினாா். தென்காசி மாவட்ட இணை இயக்குநா் செல்வராஜ், உறைவிட மருத்துவா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செவிலியா்கள் அனைவரும் கையில் மெழுகுவா்த்தி ஏந்தி, மருத்துவமனை வளாகத்தினுள் ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து செவிலியா் தின சிறப்பு உறுதிமொழி ஏற்றனா். செவிலியா் கண்காணிப்பாளா்கள் பத்மா, திருப்பதி , ராஜாதி ஜெகதா, முத்துலட்சுமி, வசந்தி ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.

சுகுணா, ரெனிஸ் பொன்ராணி ஆகியோா் சிறப்புரையாற்றினா். தூய மேரி செவிலியா் பயிற்சி கல்லூரி தாளாளா் பவுலின் சொா்ணலதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிகளை உமாமஹேஸ்வரி, சண்முகப்ரியா ஆகியோா் தொகுத்து வழங்கினா். சுரேஷ்குமாா் வரவேற்றாா். சுதா நன்றிகூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.