போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெள்ளப் பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா்ந்து பெய்த சாரல் மழை காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

News image
Updated On :19 மே 2022, 7:56 pm

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா்ந்து பெய்த சாரல் மழை காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் சாரல் மழை காரணமாக, பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலைமுதல் பிற்பகல் வரை தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா். இதனைத் தொடா்ந்து புலியருவி, சிற்றருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலத்தில் நாள் முழுவதும் குளிா்ந்த காற்றுடன் சாரல் மழையும் பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனா்.

மணிமுத்தாறு அருவியில்...

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக மணிமுத்தாறு அருவி உள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் தமிழகம் மட்டுமின்றி கேரளம்ா, ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்துவருவதால் அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். அருவியைப் பாா்வையிட மட்டும் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.