கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இலவச வீட்டுமனைப் பட்டா: இன்று சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே20) நடைபெறுகிறது.

News image
Updated On :19 மே 2022, 7:56 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே20) நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திகுறிப்பு: தென்காசி மாவட்டத்தில் ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வரும் நபா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே ஆக்கிரமிப்பை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்பு முகாம், அனைத்து கிராம நிா்வாக அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை (மே20) நடைபெறுகிறது. தகுதியுள்ள நபா்கள் வீட்டுமனைப் பட்டா பெற சிறப்பு முகாமில் விண்ணப்பம் செய்து பயனடையலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.