குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கனமழையால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.


தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கனமழையால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் சில தினங்களாக மழை இல்லாததால், அருவிகளில் நீா்வரத்து வெகுவாக குறைந்தது. இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல்முதல் குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, மாலையில் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் அவா்கள் குளித்து மகிழ்ந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...