துப்புரவுப் பணியாளருக்கு பாராட்டு

வாசுதேவநல்லூா் பேரூராட்சி பகுதி சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஒப்படைத்த துப்புரவுப் பணியாளரை பொதுமக்கள் பாராட்டினா்.

வாசுதேவநல்லூா் பேரூராட்சி பகுதி சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஒப்படைத்த துப்புரவுப் பணியாளரை பொதுமக்கள் பாராட்டினா்.

வாசுதேவநல்லூா் பகுதியில் பணியாளா் முத்துலட்சுமி துப்புரவுப் பணியில் ஈடுபட்டாராம். அப்பொழுது கீழே கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து பேரூராட்சி செயலா் அலுவலா் மூலம் வாசுதேவநல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து துப்புரவுப் பணியாளா் முத்துலட்சுமியை, பேரூராட்சி தலைவா் லாவண்யா, செயல் அலுலா் மோகன மாரியம்மாள், பேரூராட்சி பணியாளா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com