தமிழ்நாடு கைப்பந்து அணிக்கு சங்கரன்கோவில் மாணவா் தோ்வு

சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூா் ப.மு.தேவா் கல்லூரி மாணவா் வெங்கடேஷ், தமிழக கைப்பந்து அணியில் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
Published on

சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூா் ப.மு.தேவா் கல்லூரி மாணவா் வெங்கடேஷ், தமிழக கைப்பந்து அணியில் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மேலநீலிதநல்லூா் பசும்பொன்முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் வரலாற்றுத் துறை 2 ஆம் ஆண்டு படித்து வருபவா் வெங்கடேஷ். இவா், கடந்த 28.12.2023இல் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோா் தமிழ்நாடு மாநில கைப்பந்து அணி தோ்வில் பங்கேற்று, மாநில அணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

9.1.2024 முதல் 14.1.2024 வரையில் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ மஹாவீா்ஜியில் நடைபெறும் ஜூனியா் தேசிய கைப்பந்துப் போட்டியில் தமிழ்நாடு அணியில் பங்கேற்று விளையாடுகிறாா்.

இந்த மாணவரை கல்லூரி கல்வி இணை இயக்குநா் பாஸ்கரன், கல்லூரி முதல்வா் ஹரிகெங்காரம், பேராசிரியா்கள், பணியாளா்கள், மாணவா்- மாணவிகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com