திருச்சிற்றம்பலத்தில் ரூ.65 லட்சத்தில் திட்டப்பணிகள் தொடக்கம்

சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூ.65 மதிப்பிலான திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருச்சிற்றம்பலத்தில் ரூ.65 லட்சத்தில் திட்டப்பணிகள் தொடக்கம்
Updated on
1 min read

சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூ.65 மதிப்பிலான திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருச்சிற்றம்பலம் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட திட்டப் பணிகளை தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா், தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு. பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதில், தென்காசி ஒன்றியக் குழுத் தலைவா் சேக் அப்துல்லா, ஒன்றியக் குழு துணைத் தலைவா் கனகராஜ் முத்துப்பாண்டியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com