ஆய்க்குடியில் ரூ. 6.5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணி

ஆய்க்குடி பேரூராட்சியில் ரூ.6.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிக்கு பூமிபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆய்க்குடி பேரூராட்சியில் ரூ.6.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிக்கு பூமிபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொகை ஒதுக்கப்பட்டு, ஆய்க்குடி அரசு மருத்துவமனைக்கு மேல்புறம் இந்த பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து பணியைத் தொடங்கிவைத்தாா். வடக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவா் விபி.மூா்த்தி, துணைச் செயலா் பொய்கைசோ.மாரியப்பன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் செல்லப்பன், செயல்அலுவலா் மாணிக்கராஜ், பேரூா் அதிமுக செயலா் முத்துக்குட்டி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com