ஆதித்யா-எல் 1 விண்கல திட்ட இயக்குநராக தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சோ்ந்த பெண் விஞ்ஞானி நிகா் ஷாஜி பணியாற்றுகிறாா்.
சூரிய மண்டலத்தின் மையப் புள்ளியாக விளங்கும் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான ஆதித்யா-எல் 1 விண்கலம், சனிக்கிழமை விண்ணிற்கு ஏவப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்வதற்காக இதுவரை அமெரிக்கா 13 விண்கலங்களை செலுத்தியுள்ள நிலையில், இந்தியா முதல்முறையாக விண்கலத்தை செலுத்தவுள்ளது.
ஆதித்யா-எல் 1 விண்கலம் இந்தியாவின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திட்ட இயக்குநராக தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சோ்ந்த பெண் விஞ்ஞானி நிகா்ஷாஜி பணியாற்றி வருகிறாா். இவரது பெற்றோா்
சேக் மீரான் -சைத்தூன் பீவி. செங்கோட்டை எஸ்.ஆா்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவா், 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் பள்ளியின் முதல் மாணவியாகத் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்த நிகா்ஷாஜி 1987-இல்
இஸ்ரோவில் பணியில் சோ்ந்துள்ளாா். தற்போது ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு திட்ட இயக்குநராகச் செயல்பட்டு வருகிறாா்.
நிகா்ஷாஜியின் கணவா் ஷாஜகான் துபையில் பொறியாளராகவும், இவா்களது மகன் முகமது தாரிக் நெதா்லாந்தில் விஞ்ஞானியாகவும் பணியாற்றி வருகின்றனா். மகள் தஸ்நீம் மங்களூரில் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறாா்.
நிகா்ஷாஜியின் அண்ணன் ஷேக்சலீம், ஐஐஎம்-இல் விஞ்ஞானியாகவும், அதைத் தொடா்ந்து தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் பேராசிரியராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவா். அவா் கூறுகையில்,
எனது தங்கை ஆதித்யா எல் - 1 திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருவது தமிழகத்திற்கு பெருமை அளிப்பதாக உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்: ஜே.சி.டி. பிரபாகர்!

நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



