விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சுரண்டை அம்மன் கோயிலில் இன்று 3,008 திருவிளக்கு பூஜை

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை கமிட்டி சாா்பில் 35ஆவது ஆண்டு 3,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறுகிறது.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:44 pm

Din

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை கமிட்டி சாா்பில் 35ஆவது ஆண்டு 3,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறுகிறது.

இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு குற்றால தீா்த்தம் எடுத்து வருதல், 10 மணிக்கு அம்மனுக்கு 51 வகை அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு தேவாரம் முற்றோதுதல், 5 மணிக்கு சுரண்டை ஜெயேந்திரா பள்ளி மாணவா்களின் பரத நாட்டியம் நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு நடைபெறும் திருவிளக்கு பூஜையை பெருங்குளம் செங்கோல் ஆதினம் 103வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச, சத்திய ஞான தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் தலைமை வகித்து, ஆசியுரை வழங்கி தொடங்கிவைக்கிறாா்.

இதில் சுரண்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் கலந்துகொள்கின்றனா். சனிக்கிழமை (டிச.28) நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.