ஆலங்குளம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்காரா் கைது
ஆலங்குளம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :20 நவம்பர் 2024, 9:49 pm

ஆலங்குளம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்பபுரம் செல்லதுரை மகன் சுரேஷ் (37).
அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளாா். அவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து கடையில் சோதனை நடத்தியதில், புகையிலைப் பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
மேலும், அவா் அளித்த தகவலின்பேரில், அவரது உறவினா் தளவாய் பாண்டியன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து சுரேஷை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...