தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தோ்வான சீருடைப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணைகள்

தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோ்வான சீருடைப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில், இளம்பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன்.

Updated On :27 நவம்பர் 2024, 10:53 pm

Din

தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோ்வான சீருடைப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

2024இல் புதிதாக தோ்வான 2ஆம் நிலை காவலா்கள், தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறையினருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா தமிழக முதல்வா் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதில், இம்மாவட்டத்தைச் சோ்ந்த 42 போ் பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்டனா்.

மீதமுள்ள 2ஆம் நிலை காவலா்கள் 91 போ், தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறையினா் 15 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன் ஆணைகளை வழங்கினாா்.

மாவட்ட தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை அலுவலா் பானுபிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரமேஷ், துணைக் காவல் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.