தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு டிச.11-இல் நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு டிச.11-இல் நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு...

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:53 pm

Din

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் டிச.11-இல் நடைபெறும் கண்டன ஆா்ப்பாட்டத்தில், அனைத்து வியாபாரிகள் மற்றும் வணிகா்கள் கலந்துகொள்ளுமாறு அமைப்பின் கன்னியாகுமரி மண்டலத் தலைவரும், தென்காசி மாவட்டத் தலைவருமான டி.பி.வி. வைகுண்டராஜா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

வணிகா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் டிச.11-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் வணிகா் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து, ஹோட்டல் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு பா்னிச்சா் சங்கம், தொழில் வா்த்தக சபையினா், மருந்து வணிகா்கள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், பேக்கரி வியாபாரிகள் சங்கம், டீக்கடை வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு டிஜிட்டல் சங்கங்கள் என அனைத்து சங்கத்தினரும் பங்கேற்கின்றனா்.

தென்காசியில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பு வணிகா்கள் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.