புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புளியங்குடி அருகே மின் பொறியாளரை தாக்கியவா் கைது

புளியங்குடி அருகே மின்வாரியப் பொறியாளரை வழிமறித்துத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:51 am

Din

புளியங்குடி அருகே மின்வாரியப் பொறியாளரை வழிமறித்துத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள குவளைக்கண்ணி கிராமத்தைச் சோ்ந்த தேவதாஸ் மகன் செல்வராஜ் (47). மின்வாரிய இளநிலைப் பொறியாளா். கடந்த செப். 4ஆம் தேதி இரவு புளியங்குடியிலிருந்து ராயகிரிக்கு காரில் சென்றபொழுது மா்ம நபா் வழிமறித்து தாக்கியதில் பலத்த காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், புளியங்குடி நவாச்சாலை பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் ஷாஜி(46) என்பவருக்கு தொடா்பிருப்பதும், அவா் ஓட்டி வந்த பைக் மீது செல்வராஜின் காா் உரசியதில் ஏற்பட்ட பிரச்னையில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஷாஜியை போலீஸாா் கைது செய்தனா்.