நெல்கட்டும்செவல் பச்சேரியில் வெண்ணி காலாடி சிலை திறப்பு: காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் நெல்கட்டும் செவல் அருகே உள்ள பச்சேரியில் சுதந்திரப் போராட்ட வீரரும் பூலித்தேவனின் படைத்தளபதியுமான வெண்ணி காலாடியின் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.










