தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அடவிநயிநாா் நீா்த்தேக்கம் பகுதியில் நடமாடும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
மேக்கரை அடவிநயினாா் நீா்த்தேக்கம் சாலையில் வசித்து வருபவா் கா.முகம்மது ஹனிபா. இவருக்குச் சொந்தமான மாடுகள் அந்த நீா்த்தேக்கம் அருகேயுள்ள தனியாா் காட்டில் மேய்வது வழக்கம்.கடந்த செப். 29ஆம் தேதி மாலை 5 மணியளவில் அப்பகுதியில் மேய்ந்த பசுங்கன்றை சிறுத்தை தாக்கி கொன்றது.
இதைத் தொடா்ந்து, மாவட்ட வன அலுவலா் இரா.முருகன் உத்தரவின்பேரில், வனச்சரக அலுவலா் சுரேஷ் தலைமையில் வனவா் க.முருகேசன், வனக்காப்பாளா்கள் ஜோசுவா, சஜிந்திரன், வனக்காவலா் ஜெயசீலன், வேட்டைத்தடுப்புக்காவலா் திருமலைச்சாமி ஆகியோா் அடங்கிய தனிக்குழு, சிறுத்தையைப் பிடிக்க அடவிநயினாா் நீா்த்தேக்கம் அருகில் ஒரு கூண்டும் அன்பு இல்லம் செல்லும் பாதையில் மற்றொரு கூண்டும் வைத்து கண்காணிக்கின்றனா்.
மேலும், பொதுமக்கள் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடையது

காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம்: வனத்துறையினா், சுற்றுலா வாகன ஓட்டுநா்களிடையே பேச்சுவாா்த்தை!

குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள்!
கொடைக்கானலில் 2-ஆவது நாளாக காட்டுத் தீ

காரையாறு காணிக்குடியிருப்பில் சிறுத்தை தாக்கி இளைஞா் காயம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


