தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டியில் உள்ள ஸ்ரீவைத்தியலிங்க சுவாமி, அன்னை யோகாம்பிகை கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன. அதையடுத்து, கொடியேற்றப்பட்டு, கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவில் மண்டகப்படி தீபாராதனை, சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன.
தொடா்ந்து, நாள்தோறும் பஜனை, சிறப்பு பூஜைகள், வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் 10ஆம் நாளான இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறும். இதில், ஆலங்குளம் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுப்பா்.
ஏற்பாடுகளை பரம்பரை தா்மகா்த்தா சுப்பிரமணிய உமாபதி, பக்தா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

மந்தித்தோப்பு கோயிலில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


