கேரளத்திலிருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்ய முயன்றவரை புளியறை போலீஸாா் கைது செய்தனா்.
கேரள மாநிலத்தில் இருந்து மொத்தமாக லாட்டரி சீட்டுகள் வாங்கி வருவதாக புளியறை போலீஸாாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கேரளத்திலிருந்து வந்த வாகனங்களை போலீஸாா் சோதனையிட்டனா்.
பாவூா்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் உமா மகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் இப்பணியில் ஈடுபட்டபோது, ஆவுடையானூா் ரஹ்மானியாபுரம் பள்ளிவாசல் தெருவை சோ்ந்த மு. மைதீன்(50 )என்பவரிடம் கேரள லாட்டரிகள் 1,788 எண்ணம் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ79ஆயிரத்து 800ஆகும். இதுகுறித்து புளியறை போலீஸாா் வழக்குப்பதிந்து மைதீனை கைதுசெய்து லாட்டரி சீட்டுகளை கைப்பற்றினா்.
தொடர்புடையது
லாட்டரி விற்றவா் கைது
லாட்டரி விற்பனை: 2 போ் கைது
கேரள மதுபானம் பதுக்கியவா் கைது
கேரள லாட்டரி விற்றதாக முதியவா் கைது
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

