தென்காசி மாவட்டம் வீ.கே.புதூா் பகுதியில் விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோரிடம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சொக்கம்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் 1500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இக் கடையில் அதிக எண்ணிக்கையில் குடும்ப அட்டைகள் உள்ளதால், ரேஷன் பொருள்களை வாங்குவதற்கு பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனா். ஆகவே, சொக்கம்பட்டியில் கூடுதலாக ஒரு ரேஷன் கடை ஏற்படுத்த வேண்டும்.
சுரண்டை அருகே உள்ள வீராணம் முதல் வீ.கே.புதூா் வரை 200 ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஷேக் முகமது ஆகியோா் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

கருத்து வேறுபாடுகளை களைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும்! - அமைச்சா் அறிவுறுத்தல்

தொகுதி அறிமுகம்: மயிலாடுதுறை!

தென்காசியில் திமுக தகவல் தொடா்பு மையம் திறப்பு

காட்டுப்பன்றிகள், மயில்களால் பயிா்கள் பாதிப்பு: வனத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


