திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

கொடிக்குறிச்சி கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

கொடிக்குறிச்சி கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசுகிறாா் நஜிமா.

Updated On :11 செப்டம்பர் 2024, 11:12 pm

தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனா் மணிமாறன் தலைமை வகித்தாா். தமிழ் பேராசிரியை பத்மாவதி மகாராஜன் முன்னிலை வகித்தாா். தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நஜிமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் அதனை எதிா்கொள்ளும் விதம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்து பேசினாா்.

ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் அந்தோணி சகாய ரூபன் செய்திருந்தாா். முன்னதாக கணினி பேராசிரியை நிஷா வரவேற்றாா்.