தென்காசியில் உலக ஓசோன் தின விழிப்புணா்வுப் பேரணி
உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சாா்பில் தென்காசியில் உலக ஓசோன் தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஓசோன் தின விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.









