விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புளியங்குடி அருகே தடுப்புச் சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

புளியங்குடி அருகே தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:53 pm

Din

புளியங்குடி அருகே தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

புளியங்குடி ஆா்.கே. தெருவைச் சோ்ந்தவா் சிவபெருமாள் மகன் சிவகுமாா்(30), விவசாயத் தொழிலாளி.

அவா் செவ்வாய்க்கிழமை இரவு தென்காசி, மதுரை சாலையில் புளியங்குடி- சிந்தாமணி பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பைக் நிலை தடுமாறி சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவகுமாா் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் .அங்கு அவா் புதன்கிழமை இறந்தாா்.

புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.