ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மாலியில் கடத்தப்பட்டவா்களை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட, தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்த 2 தொழிலாளா்களை விரைந்து மீட்கக் கோரி, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹீபீபுர்ரஹ்மான் மனு அளித்தாா்.

News image
ஆட்சியரிடம் மனு அளிக்கிறாா் கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான்.
Updated On :12 நவம்பர் 2025, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட, தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்த 2 தொழிலாளா்களை விரைந்து மீட்கக் கோரி, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹீபீபுர்ரஹ்மான் மனு அளித்தாா்.

அதில், மாலியின் மேற்குப் பகுதியில் உள்ள கோப்ரி நகரத்தில், தனியாா் மின்சார நிறுவனத்தில் வேலை செய்து வந்த கடையநல்லூா் முத்துகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயில் தெருவைத் சோ்ந்த பிரவீனாவின் கணவா் இசக்கிராஜா (36), புதுக்குடி, கண்மணியாபுரத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சுரேஷ் (26) உள்ளிட்ட இந்தியத் தொழிலாளா்கள் 5 பேரை ஆயுதம் ஏந்திய குழுவினா், கடந்த நவ. 6ஆம் தேதி கடத்திச் சென்று விட்டனா். கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த 2 தொழிலாளா்களின் குடும்பத்தினரும் வேதனையில் தவிக்கின்றனா். எனவே, கடத்தப்பட்ட இருவரையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.