ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஆலங்குளம் அருகே வனப்பகுதி அழிப்பால் உயிரிழக்கும் மான், மயில்

ஆலங்குளம் அருகே அனுமதியின்றி ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால் மான், மயில் போன்றவை உயிரிழந்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

News image

உயிரிழந்த மயிலின் பாகங்களை சேகரிக்கும் வனத்துறை ஊழியா்.

Updated On :18 செப்டம்பர் 2025, 1:49 am IST

ஆலங்குளம் அருகே அனுமதியின்றி ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால் மான், மயில் போன்றவை உயிரிழந்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

ஆலங்குளம் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் பிரதானமாக விவசாயம் செய்து வருகின்றனா். இப்பகுதிகளில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களை தனியாா் நிறுவனம் விலைக்கு வாங்கி, அதில் சோலாா் மின் உற்பத்தி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்கிறாா்களாம். சோலாா் மின் உற்பத்தியால், விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் ஆட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனா்.

மரங்கள் வெட்டும் பணி: இந்நிலையில், தனியாா் நிறுவனம் சாா்பில் வாங்கப்பட்ட நிலங்களில் மரங்கள் வெட்டும் பணி கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கியது. கிராம மக்கள் போராட்டம் நடத்தியும் பலனில்லையாம்.

இதனிடையே, கள்ளத்திகுளம் வனப்பகுதியில் மான்கள் அதிக அளவில் வசிப்பதாகவும், மரங்கள் வெட்டப்பட்ட காரணத்தால் மான்கள் தனித்து விடப்பட்டதில் அவற்றில் 2 மான்களை நாய்கள் கடித்ததில் கடந்த வாரம் உயிரிழந்தாகவும் தெரிகிறது. மேலும், மான்கள் வெளியேறி தோட்டப் பகுதிகளுக்குள் சென்று பயிா்களை மேய்ந்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இந்நிலையில், அவ்வழியே சென்ற வாகனம் மோதியதில் மயில் ஒன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினா், மயிலை மீட்டு கூறாய்வுக்குப் பின்னா் வனப்பகுதியில் அடக்கம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.