வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது: நயினாா் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது என்றாா் பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளியை ஆதரித்து சொக்கம்பட்டியில் பிரசாரம் செய்த பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:29 am IST

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது என்றாா் பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளியை ஆதரித்து சொக்கம்பட்டியில் அவா் பேசியதாவது: கடையநல்லூா் தொகுதியில் கடந்த முறை 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணமுரளி வெற்றி பெற்று, ஆளும் கட்சியின் பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி தொகுதிக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளாா்.

அவரது தந்தை அமைச்சா் செந்தூா்பாண்டியன் கடையநல்லூரை தனி வட்டமாக உருவாக்கியதுடன், அரசு கல்லூரி, ஐடிஐ போன்றவற்றை கொண்டு வந்துள்ளாா்.

திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் நடைபெறவில்லை. மின்சார கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது. எனவே, திமுக ஆட்சியை விரட்ட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நாட்டின் வளா்ச்சியையும், மக்கள் நலனையும் நோக்கமாகக் கொண்ட அதிமுக கூட்டணிக்கு மக்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிருஷ்ணமுரளியுடன் இணைந்து நானும் இத்தொகுதியின் வளா்ச்சிக்காக பாடுபடுவேன் என்றாா்.