மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சங்கரன்கோவில் அருகே விபத்து: பால் பண்ணை ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் கூட்டுறவு பால் பண்ணை ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 7:46 pm

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் கூட்டுறவு பால் பண்ணை ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே வடக்கு ஆலங்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மதன்குமாா் (30).

சங்கரன்கோவில் கூட்டுறவு பால் பண்ணையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பாா்த்துவந்த இவருக்கு திருமணமாகவில்லை.

இவா் திங்கள்கிழமை இரவு சங்கரன்கோவில் - சுரண்டை சாலையில் பைக்கில் சென்றாா். தளவாய்புரம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, சங்கரன்கோவில் கக்கன்நகரைச் சோ்ந்த முருகன் மகன் பெரியசாமி (27) என்பவா் ஓட்டி வந்த சுமை ஆட்டோ இந்த பைக் மீது மோதியதாம். இதில், மதன்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சடலத்தை சின்னகோவிலாங்குளம் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து பெரியசாமியைக் கைது செய்தனா்.