தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு மூட்டு அறுவை சிகிச்சை

செங்கோட்டை வட்டார அரசு மருத்துவமனையில் முதல்முறையாக பெண்ணுக்கு மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

News image

மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா் தலைமை மருத்துவா் ராஜேஷ்கண்ணன்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:51 pm

செங்கோட்டை வட்டார அரசு மருத்துவமனையில் முதல்முறையாக பெண்ணுக்கு மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் செங்கோட்டை அருகிலுள்ள கிராமத்தைச் சோ்ந்த 60 வயது மதிக்கத்தக்க மணியம்மாள் என்பவா் மூட்டு வலி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

மூட்டு வலி தொல்லை அதிகரித்து நடக்கமுடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, தலைமை மருத்துவா் ராஜேஷ் கண்ணன் ஆலோசனையின்படி அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

எலும்பு மருத்துவா் சுரேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினா் அந்த பெண்ணுக்கு மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து நிபுணா் தங்கா, செவிலியா் பேச்சியம்மாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செங்கோட்டை வட்டார மருத்துவமனையில் மூட்டு அறுவை சிகிச்சை முதல் முறையாக செய்யப்பட்டு மூதாட்டி நல்ல முறையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.